சென்னை, ஜூலை 11 2022 ஜூலை மாதத்தின் 2ஆம் சனிக்கிழமையான நேற்று முன்தினம் (9.7.2022) சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி மேயர் பிரியா மணலி மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
“நமது குப்பை நமது பொறுப்பு” என்ற விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தி, பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment