40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

விடுதலை சந்தா வழங்கல்
படம் 1: திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் அண்ணாநகர் துரை.விஜயகுமார் விடுதலை ஓராண்டு சந்தா மற்றும் மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் புரசை அன்புச்செல்வன். படம் 2: ஒடல்பட்டி வேளாண்துறை அலுவலர் ச.இளங்கோவன் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரனிடம் அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினார். உடன் பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் இர.கிருட்டிணமூர்த்தி உள்ளார்.
--------------------------------------------
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகரில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி 
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் ப.சந்தானம் இரண்டாண்டு விடுதலை சந்தா, சிங்கப்பெருமாள் கோயில் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் வடகால் பா. மாரிமுத்து ஓராண்டு விடுதலை சந்தா, சிங்கப்பெருமாள் கோயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனார்த்தனம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர், பேரமனூர் பெரியார் பற்றாளர் திமுக வினோத் பத்தாண்டு விடுதலை சந்தா தருவாக உறுதி கூறினார்.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவர் க.பால் ஆறுமாத விடுதலை சந்தா, செங்கல்பட்டு ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மு.குமாரசாமி ஓராண்டு விடுதலை சந்தா, மறைமலை நகர் சுயமரியாதை வீரர் இரா.மருதீஸ்வரன்-லட்சுமி, மகன் சுபாசு குடும்பத்தின் சார்பில் ஓராண்டு விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.
பெரியார் பெருந்தகையாளர் மறைமலை நகர் இராம் மோகன் பத்து விடுதலை சந்தாவிற்கு உறுதி கூறினார்.  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மாநில துணைச்செயலாளர் மறைமலை நகர் ஜானகி அம்மாள் விடுதலை வாழ்நாள் சந்தா,  சிங்கப்பெருமாள் கோயில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கே. ஆர்.சி. ஜெ. ரித்தீஷ் அய்ந்து ஓராண்டு விடுதலை சந்தா, சிங்கப்பெருமாள் கோயில் மருத்துவர் கே. செந்தில் ஓராண்டு விடுதலை சந்தா, சிங்கப்பெருமாள் கோயில் திமுக மாவட்ட பிரதிநிதி சி.எம். கதிரவன் ஓராண்டு விடுதலை சந்தா, மறைமலை நகர் வள்ளுவர்மன்ற செயலாளர் மா.சமத்துவமணி ஓராண்டு விடுதலை சந்தா,  திருக்கச்சூர் பெரியார் பற்றாளர் மு. ஜெயச்சந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா, சிங்கப்பெருமாள் கோயில் விளையாட்டுத்துறை ஊக்குநர் தலைவர் ரவி ஓராண்டு விடுதலை சந்தா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் திருக்கச்சூர் இரா.அழகேசன் ஓராண்டு விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம்  வழங்கினர்.

சிங்கப்பெருமாள் கோயில் கழக இளைஞரணி பொறுப்பாளர் அருண்குமார் -அனிதா இணையர் மகள் மகிழினியுடன் ஓராண்டு விடுதலை சந்தா, திருக்கச்சூர் பெரியார் பற்றாளர் மோ.சத்தியநாராயணன் ஓராண்டு விடுதலை சந்தா, செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆசிரியர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் 10 விடுதலை சந்தா இரசீது பெற்றுக் கொண்டனர். மறைமலைநகர் மகேசுவரி டிரேடர்ஸ் உரிமையாளர் க.மணிகண்டன் ஓராண்டு விடுதலை சந்தா, செங்கல்பட்டு ஆப்பூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சு. கேசவன்-இராஜேஸ்வரி இணையர் ஆறுமாத விடுதலை சந்தா, மறைமலை நகர் கே.காண்டீபன் குடும்பத்தினர் ஓராண்டு விடுதலை சந்தாவிற்கு உறுதி கூறினார்கள்.  செங்கல்பட்டு மறைமலைநகர் நகர்மன்ற திமுக உறுப்பினர் விசயலெட்சுமி-15ஆவது வட்ட திமுக செயலாளர் நித்தியானந்தம் இணையர் ஓராண்டு விடுதலை சந்தா, தஞ்சாவூர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  திருக்குறள் நெறியாளர் கு.பரசுராமன் வாழ்நாள் விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி கழக மாவட்ட மீஞ்சூர் ஒன்றியம் பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வு பொன்னேரி நகர தலைவர் வே. அருள் தலைமையில் நடைபெற்றது. உடன் பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர். பொன்னேரி இளைஞரணி அமைப்பாளர் க.சுகன்ராஜ் உள்ளனர். ஓராண்டு சந்தா வழங்கியவர்கள் விவரம்: அமரத்காந்தி - தி.மு.க அரசு வழக்குரைஞர், அரிபாபு - வழக்குரைஞர், பல்லவன் - வழக்குரைஞர் தி.மு.க, விக்கி ஸ்டுடியோ பொன்னேரி, பாளையம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி, உமாபதி பஞ்சாயத்து தலைவர்,காட்டாவூர், பி.இராஜேஷ்கண்ணன் தி.மு.க. மற்றும் தஞ்சாவூர் புகழ்மிகு கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் பெரியார் பெருந்தகையாளர் மருத்துவர் மா. செல்வராசு ஆறு ஆண்டு விடுதலை சந்தாவை பேரா.குட்டிமணியிடம் வழங்கினர்.

உரத்தநாட்டில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி 
உரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர்  பார்வதி சிவசங்கர், உரத்தநாடு குழந்தைகள் நல மருத்துவர் விடுதலை வாசகர் டாக்டர் ராஜேந்திரன், உரத்தநாடு பொதுநல மருத்துவர் வெற்றிவேந்தன், பொதுநலத் தொண்டர் உறந்தைராயன் குடிக்காடு ரகுநாதன், உரத்தநாடு பேரூராட்சி மன்ற உறுப்பினர் பிரபு, மெஸ்  உரிமையாளர் ராதா தங்கவேல், வால் பட்டறை உரிமையாளர் சண்முகம், உரத்தநாடு செந்தூர் வேலவன் கணினி மய்யம் உரிமையாளர்  சரவணன், உரத்தநாடு ஜி.கே. வுட் வொர்க்  உரிமையாளர் விடுதலை வாசகர் மரக்கடை கருப்பையன், உரத்தநாடு அருணகிரி வால் பட்டறை உரிமையாளர் சுப்பையா, உரத்தநாடு மரக்கடை மோகன் ஆகியோர் உரத்தநாடு நகர திராவிடர் கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரனிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர் உடன் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அ.உத்திராபதி உள்ளனர்.




No comments:

Post a Comment