கூடலூர், ஜூலை 18 கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து எகிறியது. இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் 135.75 அடியானது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,737 கனஅடி. அணையிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிக்கு 1,867 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,352 மில்லியன் கனஅடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகமானால், ரூல்கர்வ் விதிப்படி உபரிநீர் கேரளப்பகுதிக்கு திறப்பதைவிட, தமிழ்நாட்டுப் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் எடுத்துச் செல்ல தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Monday, July 18, 2022
136 அடியை நெருங்கியது முல்லைப் பெரியாறு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment