சட்டமன்ற உறுப்பினர் இரா.இராசேந்திரன் 100 சந்தாக்களுக்கான தொகை ரூ.2 லட்சம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

சட்டமன்ற உறுப்பினர் இரா.இராசேந்திரன் 100 சந்தாக்களுக்கான தொகை ரூ.2 லட்சம் வழங்கினார்

சேலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இராசேந்திரன் அலுவலகத்தில் நடைபெற்ற விடுதலை ஏட்டைப்பற்றிய சிறப்புக்கூட்டம்,  தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில்  விடுதலை ஏட்டின் சிறப்பையும்,  தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு விடுதலையின் ஆசிரியர் பணியையும் விளக்கி மாநிலஅமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன் உரையாற்றினார்.  சேலம்மத்திய மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் இரா.இராசேந்திரன் 100 விடுதலை ஆண்டுசந்தாக்கள்தொகை ரூ.இரண்டுலட்சத்தை கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் தோழர்களிடம் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். வந்திருந்த பகுதிசெயலாளர்கள் பன்னீர்செல்வம், பிரகாசு ஆகியோர் வழியாக வாழ்நாள் சந்தா திரட்டித்தர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் நன்றி கூறினார்.உடன் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.ச.இளவழகன் , மாவட்டச் செயலாளர் பா. வைரம் , மாவட்ட இணைச்செயலாளர் வீரமணி ராஜு, மாநகர துணை செயலாளர் போலீஸ் ராஜு மண்டல இளைஞரணி செயலாளர் அ.இ.தமிழர் தலைவர் . விடுதலை சந்தாவேண்டுகோள் துண்டறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment