கால்நடை மருத்துவ உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளிலும் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

கால்நடை மருத்துவ உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளிலும் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்

சென்னை,ஜூன்11- கால்நடை தோல் நோய் சிகிச்சை குறித்த 3 நாள் பன்னாட்டு  மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உரை யாற்றியபோது கால்நடை மருத்துவ முன்னோடி தமிழ் நாடு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கால்நடை களுக்கு ஏற்படும் தோல் நோய் களுக்கு நவீன உயர் சிகிச்சை யளிக்கும் மருத்துவக் கட்ட மைப்பு தமிழ்நாட்டில் உள்ள தாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கால்நடை தோல் நோய் சிகிச்சை குறித்த 3 நாள் பன் னாட்டு  மாநாட்டின் தொடக்க விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 9.6.2022 அன்று நடைபெற்றது. அதனை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசியதாவது:  கால்நடை நலனுக்காக சிறப்பு சுகாதார முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழ் நாடு அரசால் அறிவிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் கால் நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவ துடன் கிராமப் புறங்களின் பொருளாதாரமும் முன் னேற்றம் அடை யும்.

மற்றொருபுறம் கால்நடை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவத்தில் உயர் சிகிச்சைகளை வழங்குவதிலும், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி களிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அதிநவீன சிகிச்சை வசதிகள் இங்கு உள்ளன. அதே போன்று, தமிழ்நாடு தோல் பொருள்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. எனினும், மாடுகளின் தோல்களில் சிறு வெடிப்புகள், தழும்புகள் இருந் தாலும் சந்தைகளில் அதன் மதிப்பு குறைகிறது. மேலும், பூச்சிக்கடி மற்றும் உண்ணியால் ஏற்படும் பல்வேறு வித நோய் களால் விவசாயிகள் பொருளா தார இழப்பை சந்திக்கின்றன. இதன் தாக்கத்தை தோல் பொருள்களின் உற்பத்தி, ஏற்றுமதியில் உணர முடிகிறது. எனவே, கால்நடைகளின் தோல் நோய் பாதிப்புகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்குவது இன்றியமையாதது.

அதைக் கருத்தில் கொண்டு, கால்நடைக்காக தோல் மருத்துவப் பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு தொடங்கப் பட்டது. மேலும், தோல் மருத் துவப் பிரிவில் உள்ள அதிநவீன சிகிச்சைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறைகள் கால்நடை மருத் துவப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கால்நடை மருத்துவக்கழக தலைவர் உமேஷ் சந்திர சர்மா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.என்.செல்வக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment