மாநிலங்களவையில் குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

மாநிலங்களவையில் குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்கள்

புதுடில்லி, ஜூன் 30-  31 சதவீத மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர் களில் 6 பேர், தமிழ் நாட் டில் இருந்து தேர்ந் தெடுக் கப்பட்டவர்கள் ஆவர். 

தற்போது பதவி வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரம் மற்றும் சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண் காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. 

அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:- மொத்தம் 233 மாநிலங் களவை உறுப்பினர்களில் 226 பேரை பற்றிய விவரங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இவர்களில் 197 பேர் கோடீசுவரர்கள் ஆவர். அதாவது, 87 சதவீதம் பேர் கோடீசுவரர்கள். ஒவ்வொரு எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79 கோடியே 54 லட்சம். குற்ற வழக்குகள் 71 உறுப் பினர்கள் (31 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக் குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.  கட்சி ரீதி யாக பார்த்தால், அவர்க ளில் 20 பேர் பா.ஜன தாவை சேர்ந்தவர்கள். 12 பேர் காங்கிரசையும், 3 பேர் திரிணாமுல் காங்கி ரசையும், 5 பேர் ராஷ்டிரீய ஜனதாதளத்தையும், 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியையும், தலா 3 பேர் ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளையும், 2 பேர் தேசியவாத காங்கிரசை யும் சேர்ந்தவர்கள். மாநி லவாரியாக பார்த்தால், இவர்களில் 6 பேர் தமிழ் நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். அதிகபட்ச மாக, 12 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

பாலியல் வழக்கு 

37 மாநிலங்களவை உறுப்பி னர்கள் மீது கடுமையான குற்ற வழக்கு கள் உள்ளன. 2 பேர் மீது கொலை வழக்கும், 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளன. பெண் களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 4 உறுப்பி னர்கள் சிக்கி உள்ளனர்.  

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment