மருத்துவ அறிவியலின் சாதனை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

மருத்துவ அறிவியலின் சாதனை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

வாசிங்டன், ஜூன் 10- அமெரிக்கா வின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மய்யம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் நடத்தப் பட்ட சோதனையில் புற்றுநோயை 100 விழுக்காடு குணப்படுத்தும் டோஸ்டர் லிமாப்  (Dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் புற்று நோயிலிருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். சோதனையில் மிகசிறிய அளவிலானவர்களே பங் கேற்று உள்ளனர்.  இவர்களுக்கு கீமோ தெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங் காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். 

மொத்தம் 18 குடல் புற்றுநோயாளி களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட் டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். 

எம்ஆர்அய், பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் சிலர் ஏற்கெனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடி யாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத் தப்பட்டு உள்ளனர். 

இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான அறுவை சிகிச்சையும் செய்யப் படவில்லை. பொதுவாக புற்று நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர் களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளை வுகள் இருக்கும். 

ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக் கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர் களுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று டோஸ் டர்லிமாப் மருந்தை அறிமுகப்படுத்தி யுள்ள கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள மருத்துவர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல் படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும். மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப் படும். உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். புற்றுநோய் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்க ஆக 'மாஸ்க்' போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய் செல்களை கண்டறிய முடி யாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக புற்று நோய் செல்களை அழிக்க வழி செய் கிறது.

இதனால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. 

இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே ரூ. 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள். இந்த மருந்து சந்தைக்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து சந்தைக்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எவ்வளவு காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரை வில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment