ஒரே நாளில் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

ஒரே நாளில் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு

சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டில் 60 வயது நிறைவடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 18 ஆயிரம் பேர் நேற்றுடன் (31.5.2022) ஓய்வு பெற்றனர்.

தமிழ்நாட்டில் 2020 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்தது. கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசுக்கு அதிக நிதி தேவைப்பட்டது.

இதனால், 2020இல் ஓய்வு பெறவிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணப் பயன் களை வழங்க முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, ஓய்வு பெறும் வயது 59-ஆகவும், 2021இல் 60-ஆகவும் உயர்த்தப்பட்டது.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, அகவிலைப்படியும், ஈட்டிய விடுப்பு ஊதியமும் கடந்த 2 ஆண் டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்கிய அகவிலைப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுககு வழங்கப் பட்டபோதும், ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம் தொடர்கிறது.

இந்நிலையில், 2020இல் 58 வயதை எட்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்போது 60 வயதை அடைந்ததால் நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.

தலைமைச் செயலகத்தில் 49 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 5,286 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரம் பேர் நேற்று ஓய்வு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment