122 ஆண்டுக்கு பின் அதிகபட்சம் சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ மழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

122 ஆண்டுக்கு பின் அதிகபட்சம் சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ மழை

புதுடில்லி, ஜூன் 21- உலகிலேயே அதிக மழைப்பொழி வுள்ள இடம் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியாகும். இந் நிலையில் 17ஆம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் 972 மி.மீ. மழை பதிவானது. இது 122 ஆண்டு களுக்கு பின் மூன்றாவது முறையாக இங்கு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் கவுகாத்தி பிராந்திய விஞ்ஞானி சுனித் தாஸ் கூறுகையில், ”1956ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி 973 மிமீ மழை பெய்துள்ளது. 1995ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி 1563.3மி.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு முன் ஜூன் 15ஆம் தேதி 930 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை 50-60 செ.மீ. மழை பெய்வது சாதாரணமாகும். 80 செ.மீட்டருக்கு அதிகமாக பெய்வது வழக்கத்திற்கு மாறானது,” என்றார்.


No comments:

Post a Comment