மோடி அரசின் மக்கள் விரோதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

மோடி அரசின் மக்கள் விரோதம்

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை,மே23- ஒன்றிய அரசின் தவறான பொருளா தார கொள்கையை கண்டித்து 25.5.2022 முதல் 31.5.2022 வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக் கப்பட்டிருக்கிறது. 

சென்னை யில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில்,

மே 25இல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இடதுசாரி கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

 ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட் டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றிய பெட்ரோல், டீசல் வரி குறைப்பு போதாது. பெட்ரோல், டீசல் விலையில் 200 சதவீத அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு வெறும் 7 சத வீதத்தை மட்டுமே குறைந்தி ருப்பது என்பது போதாது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உள்ளிட்ட வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை யால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 

ஒன் றிய பாஜக அரசின் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

மே 26, 27இல் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், அத்தியா வசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண் டித்து போராட்டம் நடத்தப் பட இருப்பதாக தெரிவித்தார்

கள்.

No comments:

Post a Comment