அதிக கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசுகி புதிய சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

அதிக கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசுகி புதிய சாதனை

மும்பை, ஏப். 4- நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி இந்தியா, கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் 2,38,376 கார் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. 

அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார் களை மாருதி சுசுகி ஏற்றுமதி செய்திருக் கிறது. இது மாருதி சுசுகி வரலாற்றி லேயே ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய் யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண் ணிக்கை ஆகும். 

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருது சுசுகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள் ளது. மாருதியின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா வின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப் பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி கூறியதாவது:-

இந்த நாள் வாழ்வில் மறக்க முடி யாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண் டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுசுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற் றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத் துள்ளது. இந்த வளர்ச்சி தொடந்து அதிகரிக்கும் என நம்புகிறேன். இவ் வாறு ஹிடாசி டாக்யூச்சி கூறினார்.

No comments:

Post a Comment