Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சட்டமன்றத்தில் இன்று தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்
April 22, 2022 • Viduthalai

சென்னை, ஏப்.22 தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் என்று  சட்டமன்றத்தில் இன்று (22.4.2022) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இத்துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த போது அதில் தெரிவித்ததாவது:

அரசுப் பணிகளில் நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை . தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக வரிச்சலுகை போன்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தப் பயன்கள் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் சென்றடையும் விதத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அவசியம் என கருதப்படுகிறது.  ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழக்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, IIT. IIM, AIIMS ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை இவ்வரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க இயலும். எனவே, இதற்குத் தேவையான அரசமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும்" என இத்துறைக்கான மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn