அயோத்தியா மண்டப வரவு - செலவை ஆராய குழு: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு
சென்னை, ஏப்.17 அயோத்தியா மண்டபத்தின் வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் சிறீராம் சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வந்தது. இந்தசூழலில், சிறீராம் சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2013ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது.இதை எதிர்த்து, சிறீராம் சமாஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்தியதை எதிர்த்து சிறீராம் சமாஜ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தலையில், அயோத்தியா மண்டபத்தில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தின் வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்து வருகிற 19ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க தணிக்கைக்குழு அமைத்து உத்தரவிடப்படுகிறது. இக்குழுவில், இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல தணிக்கை அலுவலர் (மடங்கள் பிரிவு) ந.தனலட்சுமி, தலைமை தணிக்கை அலுவலர் அலுவலக மண்டல தணிக்கை அலுவலர் (நடமாடும் தணிக்கை குழு) ஜி.எம்.ஈஸ்வரன், சென்னை துணை தலைமை தணிக்கை அலுவலர் அலுவலகத்தின் தணிக்கை கண்காணிப்பாளர் மு.சிவன் ஆகியோர் இடம் பெறுவர். இவ்வாறு அந்த உத்தரவில் ஆணையர் தெரிவித்துள்ளார்.அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் சிறீராம சமாஜம் அமைப்பிடமிருந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சமூக ஆர்வலர் ரமணி(68), காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். இதையடுத்து, ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சிறுநீரகம் செயலிழந்த ஆண் நோயாளிக்கு வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை
சென்னை, ஏப்.17 சென்னை, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவக் குழுமமான மெட்வே மருத்துவமனையில் உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டின் மருத்துவர் குழு, சிறுநீரகம் செயலிழந்த 32 வயது ஆணுக்கு மிகவும் சவாலான பெருந்தமனி சார்ந்த அறுவை சிகிச்சையை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
சிக்கலான இந்த அறுவை சிகிச்சை குறித்து, இம்மருத்துவமனையின் இயக்குநர் - தலைமை மருத்துவர், கார்டியோ வாஸ்குலர் & தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் கூறுகையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்யும் நிலையில் இருந்ததுடன், இரண்டு இதய வால்வுகளில் கசிவு இருந்தது, ராஜ்குமாரின் பெருந்தமனி சார்ந்த அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கலை தீவிரப்படுத்தியது. இது அறுவை சிகிச்சையை பெரிய சவாலாக மாற்றியது. சிக்கலான இந்த அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நீடித்தது, அவரது உடலை 18 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை வரை குளிரூட்ட வேண்டியிருந்தது.
அத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது உடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரத்தம் பாய்வதை நிறுத்த வேண்டியிருந்தது. அதன் பிறகே அவரது இரண்டு வால்வுகளையும் சீரமைத்து, பெருந்தமனி பிரச்சினையை வெற்றிகரமாக சரிசெய்ய முடிந்தது என்றார்.
No comments:
Post a Comment