அனைத்து நேரடி நியமனங்களுக்கான இணையவழி விண்ணப்பத்தில் புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

அனைத்து நேரடி நியமனங்களுக்கான இணையவழி விண்ணப்பத்தில் புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்

சென்னை, மார்ச் 31- தேர்வு முடிவு களை துரிதப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தால் (டி.என். பி.எஸ்.சி. ) நடத்தப் படும், குரூப்-1, 2 மற்றும் 4 பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்ற அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவி களுக்கும் இணைய வழியில் விண் ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை செயல் படுத்தப்பட உள்ளது. 

அதன் விவரம் வருமாறு:-

 விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே அவர் களால் இணையவழி விண்ணப் பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள், உரிமை கோரல் களுக்கு ஆதாரமான அனைத்து தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை 200 கே.பி.க்கு மிகாமல் உள்ள ஒரு பி.டி.எப். வடிவில் இணையவழி விண் ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள், சான்றி தழ்கள் குறித்த தகவல்கள் நேரடி நியமனங்களுக்காக தேர்வா ணையத் தால் வெளியிடப்படும் அறிவிக் கைகளில் காணலாம்.

விண்ணப்பதாரர் இ--சேவை மய்யங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றி தழ்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக் கிறது. 

தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை பதி வேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப் பிக்கப்பட் டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதற்கேற் றாற் போல் விண்ணப்பதாரர்கள் ஆவ ணங்கள், சான்றிதழ்களை ஸ்கேன் (நகல்) செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களை விண்ணப்ப தாரர் தங்களுடைய ஒருமுறை பதிவின் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சான்றிதழ் தவறாக பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் விண்ணப்பித்திருந்த பதவிக் கான நுழைவுச்சீட்டினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்பு வரை, (அதாவது தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாட்கள் முன்னர்) சான்றிதழ்களை பதி வேற்றம் செய்ய, மறு பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

 எழுத்துத் தேர்வுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது, முற் றிலும் விண்ணப்பதாரர்கள் இணையவழி யில் விண்ணப்பிக் கும் போது பதி வேற்றம் செய்யப் பட்ட சான்றிதழ்கள், ஆவணங் களின் அடிப்படையிலே யே அமையும். எழுத்துத் தேர்வுக்கு பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் தேர்வாணையத் தால் அனுப்பப் படமாட்டாது. 

எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் அக்கறையுடனும், எச்சரிக் கையுடனும் இருக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணை யத்தின் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004190958 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலோ அனைத்து வேலை நாட்களி

லும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட் டுள்ள செய்திக்குறிப் பில் தெரி விக்கப்பட்டுள் ளது. 

No comments:

Post a Comment