ரசியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் அமெரிக்கா அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

ரசியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் அமெரிக்கா அறிவுறுத்தல்

வாசிங்டன், மார்ச் 1- உக்ரைன் மீது ரசிய படைகள் 6ஆவது நாளாக தாக்கு தல் நடத்துகிறது. ரசிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டை யிட்டு வருகிறது. ரசியா வின் ராணுவ நடவடிக் கைக்கு அமெரிக்கா மற் றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரை னுக்கு உதவி செய்கின்றன. ரசியாவுக்கு கடுமையான பொருளாதார தடைக ளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரசியாவும் தடைகளை விதித்து வரு கிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், ரசியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியே றும்படி அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே ரசியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று கூறிய நிலையில், தற்போது அங்குள்ள அமெரிக்கர்களை வெளியேறும்படி கூறி உள்ளது. 

ரசியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு வழக் கமான அல்லது அவசர கால சேவைகளை வழங் குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. அத்துடன், ரசிய பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடி மக்கள் துன்புறுத்தப்படுவ தற்கு சாத்தியம் உள்ளது. எனவே, அமெரிக்கர்கள் வெளியேறுவது நல்லது, என வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

முன்னதாக, ரசியா வுக்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை மூடி விட்டதாக வெளியுறவுத் துறை கூறியது. அத்து டன், ரசியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியேறும்படி  உத்தரவிட்டது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரசியா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட் டில் நேற்று (28.2.2022) பேச்சுவார்த்தை நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment