கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு..!

புதுடில்லி, மார்ச்31- கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.அய்.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது. 

கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டு முதல் (2022-23)பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏ.அய்.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது. 

இதனால் மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கிடெக் படிப்பு

இதுதவிர ஆர்கிடெக் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment