தலைநகர் கீவ்வை ரசிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற் றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதே போல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரசிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின் றன.
ரசியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகை யில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டை யிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரசிய வீரர்கள் கொல்லப் பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக் காட்சியில் தோன்றி உரையாற்றி, நாட்டை பாதுகாக்க வீரர்கள் உத் வேகத்துடன் போராடும் படி கேட்டுக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ரசியாவுடனான போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரி ழந்துள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உள்பட 1184 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர் என அந்நாட்டு உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment