திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 27.02.2022 அன்று காலை 8.00 மணியளவில் போலியோசொட்டு மருந்து முகாம் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் திருச்சி சுந்தர் நகர், கே.கே. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 212 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. . ஜெயலெட்சுமி, பேரா. . பாலசுப்ரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்'.

No comments:

Post a Comment