கவிவேந்தரும் - மேனாள் அமைச்சருமான அருமை நண்பர் கா.வேழவேந்தன் (வயது 86) அவர்கள் உடல்நலக் குறை வினால் நேற்று (26.1.2022) இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடைந்தோம்.
அவர் நல்ல சீரிய பகுத் தறிவாளர் - சுயமரியாதை வீரர். எவரிடமும் பண்புடன் பழகும் பான்மையர்.
அவரது கவிதைகள் மிகவும் உயிர்த் துடிப்பு மிகுந்த கொள்கை ஏவுகணைகளாகவே இருக்கும்.
தந்தை பெரியார் உயிரோடு இருந்த கடைசி பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் முன்னிலையில் நடைபெற்ற கவியரங்கில் பங்கேற்று சிறப்பான கவிதை வழங்கியவர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் ஆயுள் கால உறுப்பினராவார். அவருடைய பல்வேறு நூல்கள் பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் ஆகிய அமைப்புகளின் மூலம் வெளி யிடப்பட்ட சிறப்புக்குரியனவாகும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் மற்றும் நம்மிடமும் மிகுந்த பாசமும், அன்பும் கொண்டவர்.
அடிக்கடி நமக்குக் கடிதம் எழுதுவார். 'விடுதலை' மற்றும் கழக ஏடுகளின் தொடர் வாசகர்.
நம்மோடு 'மிசா' கைதியாக 1976-இல் ஒன்றாக சிலகாலம் இருந்த கொள்கைத் தியாகியும் ஆவார்.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, திராவிட இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார் பானுமதி அம்மையார், மகன்கள் மருத்துவர் வெற்றிவேந்தன், மருத்துவர் எழில் வேந்தன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தி.மு.க. வினர் அனைவருக்கும், நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
சென்னை
27-1-2022
No comments:
Post a Comment