இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான கொடூரமான மோதலில், காஸாவின் பெய்ட் ஹனூனில் ஒரு சிறுமியின் வீடு வெடிகுண்டு வீச்சுக்கு இலக்கானது (ஹமாசிடமிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடியாக நடந்த வான்வழித் தாக்குதலுக்கு கட்டடம் இலக்கானது). அந்த சிறுமியின் உருவம் - செருப்பு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே வெறுங்காலுடன் நின்றதாக இருந்தது. அந்த துளைக்கப்பட்ட சுவரின் வழியாக அடிவானத்தை உற்றுப் பார்க்கும் சிறுமி பீட் ஹனூனின் படம் காண்போரின் இதயத்தை பிளக்க வைத்தது.
கிளாஸ்கோவில் நடந்த அய்.நா. காலநிலை மாநாட்டில் உரையாற்றிய பசிபிக் தீவு நாடான துவாலுவின் வெளியுறவு அமைச்சர் சைமன் கோஃப், கடல் நீர் மட்டம் உயரும் மற்றும் வேகமான காலநிலை நெருக்கடி தனது தாழ்வான தேசத்தை எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பதை விளக்குவதற்காக கடல் நீரில் தொடை அளவு ஆழமான கடல் பகுதியில் நின்றபடி பேசினார். “எங்களைச் சுற்றி தண்ணீர் பெருகுவதால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்“ என்று கோஃப் வலியுறுத்தினார்.
மேற்கு பால்கனில் உள்ள ப்ரிபோஜ் நகருக்கு அருகில் உள்ள லிம் நதியில் குப்பைகள் குவிந்து கிடக்கும் ஒரு கோரமான பனிப்பாறையின் ஒளிப்படம் மூச்சடைக்கக் கூடிய அளவிற்கு பயங்கரமாக காட்சியளித்தது. தளர்வான கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒருங்கிணைவு, சட்டவிரோதமாக கொட்டுதல் அதிகரிப்பு மற்றும் இப்பகுதியில் வெள்ளம் - குப்பைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க உதவியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் ஒளிப்படக் கலைஞரின் விருதுக்கு, ‘தி லாஸ்ட் ப்ரீத்’ என்ற ஒரு செடியின் தொட்டியில் இணைக்கப்பட்ட ஆக்ஸிஜன் முகமூடியை அணிந்த ஒரு சிறுவனின் படம் தேர்வானது. காலநிலை நடவடிக்கை பிரிவில் தேர்வான படம் ஒட்டுமொத்த உலகின் நிலையை விளக்கும் வகையில் கருதப்பட்டது.
ஒரு சிறாரின் படம், முகக் கவசம் மற்றும் சுவாசக் கருவி வழியாக ஆக்சிஜன் தொட்டியைப் போல அவருக்கு அருகில் நிற்கும் ஒரு தொட்டியில் செடியுடன் இணைக்கப்பட்டவாறு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் நைரோபியில் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment