வேலைவாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணி நியமன ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 6, 2021

வேலைவாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணி நியமன ஆணை

அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்

திட்டக்குடி, டிச.6 தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் ஆணைக் கிணங்க கடலூர் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மய்யம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடியில் நடந்தது. கட லூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ர மணியம் தலைமை தாங்கினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், தொழி லகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குநர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பு முகாமை தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட் டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 5 ஆயிரத்து 538 பேர் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட 570 பேருக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் உடனடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். 938 நபர்கள் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

 

No comments:

Post a Comment