சிட்னி, அக். 2- இந்தியாவில் தயாரிக் கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜென்காவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகள் ஆஸ்திரேலி யாவுக்குள் தடையின்றி வரலாம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜென்காவின் இந்தியா வில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கவில்லை. கோவி ஷீல்ட் தடுப்பூசியை இரு டோஸ் கள் செலுத்தியவர்கள் பிரிட்டன் வந்தாலும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனக் கூறியது பெரும் சர்ச்சையான நிலையில் ஆஸ்திரேலிய அரசு அனுமதித்து உள்ளது.
அது மட்டுமல்லாமல் சீனாவில் தாயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசிகளாக ஆஸ்திரே லிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ் திரேலியாவுக்குள் வரும் வெளி நாட்டுப் பயணிகள் சினோவேக், கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால், அவர்கள் விடுதிகளில் தனிமையில் இருக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு இதுவரை பைசர், அஸ்ட்ராஜென்கா, மாடர்னா, கோவிஷீல்ட், சினோவேக் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி யுள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:
''இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், சீனாவில் தயாரிக் கப்பட்ட சினோவேக்ஸ் ஆகிய இரு தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசிகளாக ஆஸ்திரே லிய அரசு அறிவித்துள்ளது. பன் னாட்டு பயணிகள் இரு தடுப் பூசிகளில் ஏதாவது ஒன்றை இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால், அவர்களுக்குத் தனிமைப்படுத் துதல் அவசியமில்லை.
இதன் மூலம் பன்னாட்டு அள வில் பல்கலைக்கழகங்களில் பயி லும் லட்சக்கணக்கான மாணவர் கள் ஆஸ்திரேலியாவுக்குத் தடையின்றி வரலாம். அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் பன்னாட்டு எல்லைகள் மாநிலங்களுக்குத் திறக்கப்படும். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத் தியவர்கள் 80 சதவீதமாக அதிக ரித்துள்ளனர்
முழுமையாகத் தடுப்பூசி செலுத் திய ஆஸ்திரேலிய மக்கள், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிரந் தரக் குடியிருப்பாளர்கள் இனி மேல் விடுதியில் தனிமைப்படுத் தாமல் வீடுகளில் மட்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தினால் போதும். தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்களுக்காக வர்த் தகரீதியான விமானப் போக்குவ ரத்தும் விரைவில் தொடங்கும்.
விமானத்தில் பயணிக்கும் பய ணிகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப் பூசியை முழுமையாகச் செலுத்தி, தனிமைப்படுத்துதலை முடித்தபின் பயணிக்கலாம். இல்லாவிட்டால் 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படு வார்கள். தடுப்பூசி செலுத்தாத பயணிகள் 14 நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தடுப்பூசி செலுத்திய பயணி களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். கரோனா பரிசோதனை விமான நிலையங்களில் தொடர்ந்து நடத் தப்படும். ஆர்டிபிசிஆர் பரிசோ தனை மட்டுமல்லாமல் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்படும்''. இவ்வாறு மோரி சன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment