இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

நாகை, ஆக. 2- கோடியக் கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங் குப் பம் மீன்பிடி துறை முகத்திலிருந்து அக்கரைப்பட் டியை சேர்ந்த கவுதமன் என்பவரின் படகில் 10 மீனவர்கள் கடந்த 28-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் கோடியக் கரை கடற்பகுதி அருகே வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த னர். அப்போது மீனவர் கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படையி னர் திடீரென துப்பாக் கிச்சூடு நடத்தினர்.

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக் கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவர் காயம் அடைந் துள்ளார். காயமடைந்த மீனவர் நாகை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். எல்லை தாண்டி வந்ததால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment