தமிழ்நாடு-கருநாடகா எல்லையோரம் உள்ள தாளவாடி மலைப் பகுதிகளில், தாளவாடி பேருந்து நிலையம் மற்றும் நகரில் இருவேறு இடங்களில் கோபி மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம்,பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஏ.குப்புசாமி மற்றும் ஆசிரியர்கள் கோபி.பழனிச்சாமி, தாளவாடி சென்னா ஆகியோர் முன்னிலையில் தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சாரப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோபி கழக மாவட்டத்தின் தொடர் சுவரெழுத்துப் பணிக்கு கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், ஈரோடு மண்டல தலைவர் ப.பிரகலாதன், மண்டல செயலாளர்.பெ.இராசமாணிக்கம் மற்றும் கோபி கழக மாவட்ட தலைவர் இரா.சீனிவாசன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்து வாழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment