ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு: ஒரு கிராம் விலை 4,732 ரூபாய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு: ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்

புதுடில்லி, ஆக. 31- நடப்பு நிதியாண் டுக்கான ஒன்றிய அரசின் ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இன்று (31.8.2021) துவங்குகிறது.

இந்த ஆறாம் கட்ட வெளி யீட்டில், தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 4,732 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இன்று (31.8.2021) துவங்கி, செப்டம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நடப்பு நிதியாண்டில் தங்க பத்திரங்களை ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிட இருப்பதாக அரசால் அறி விக்கப்பட்டிருந்தது.

பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக நாள்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலை யின் சராசரியைக் கொண்டு வெளி யீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று நடை பெறும் பத்திர வெளியீட்டின் போது தங்கத்தின் விலை 4,732 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முத லீடுகளுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், ‘கிரெடிட், டெபிட்கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்கு வோருக்கு, 1 கிராம் 4,682 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன்’, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங் கள் ஆகியவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப் படும்.

ஒன்றிய அரசு, தங்கம் இறக்கு மதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில் தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தனிநபர்கள் அதிக பட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை 20 கிலோ வரை முத லீடு செய்ய முடியும்.

No comments:

Post a Comment