கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 4, 2021

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

கொந்தகை, ஜூலை 4 கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற போது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு சுமார் 4 அடி நீளம் இருக்கும். இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமை யான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற் றாண்டு காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவரும்.

இந்நிலையில், கொந்தகையில், இன்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே முழு நீள அளவிலான மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. 3-ஆவதாக கண்டுபிடிக்கப்பட்ட எலும் புக்கூட்டை தோண்டி எடுக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள் ளனர். மேலும் இந்த எலும்புக்கூடு எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என ஆய்வுக்கு பின்னர் தெரியவரும் தெரிவித் தனர். கொந்தகையில், இதுவரை 13 முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment