தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் துகிலி திராவிடர் கழக பொருளாளர் மறைந்த என்.ரெங்கநாதன் அவர்களின் வாழ்விணையரும், கழக மகளிர் அணித் தலைவர் என்.ஆர்.இராஜம்மாள் (வயது 79) 28.6.2021 அன்று மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் ஆர்.காமராஜ் உள்ளனர். துகிலி கிளைக்கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் துகிலி தமிழ்மணி, துகிலி சித்தார்த்தன், ஊராட்சி மன்றத் தலைவர் முத்து செல்வபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு ஆகியோர் மரியாதை செலுத்தினர். திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர்கழகம் சார்பில் கழகப்பொறுப்பாளர்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
Wednesday, June 30, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment