ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்: சீன அரசு நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்: சீன அரசு நடவடிக்கை

ஹாங்காங்ஏப். 1- ஹாங்காங் சட்ட மன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள சீனா, மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து உள்ளது.

சீனாவிடமிருந்து ஜனநாயக உரி மைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

ஹாங்காங்கில் சட்டமன்றம் மொத் தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹாங்காங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக் கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதர வாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர் களாக இருப்பர்.

இந்த முறையை முற்றிலும் மாற்றி சட்டமன்றத்தில் சீன ஆதரவு உறுப் பினர்களின் எண்ணிக்கையை பெரு மளவு உயர்த்த தேர்தல் முறை மாற்றி யமைக்கும் பணிகளில் சீனா இறங்கி யது.

அதன்படி கடந்த மாத தொடக்கத் தில் சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஹாங் காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை முற்றிலுமாக சிதைக்கும் நடவடிக்கை என அமெரிக்கா, இங்கிலாந்து உள் ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் ஹாங்காங் தேர்தல் முறையை மாற்றியமைக்க ஹாங்காங் அரசமைப்பில் திருத் தம் கொண்டு வருவது தொடர்பாக சீன நாடாளுமன்ற நிலைக்குழு ஓட் டெடுப்பை நடத்தியது. இதில் நாடா ளுமன்ற நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஹாங்காங் அரசிய லமைப்பில் திருத்தம் கொண்டுவரு வதற்கு ஒப்புதல் அளித்தனர். அத னைத் தொடர்ந்து உடனடியாக அர சமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தேர்தல் முறை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹாங்காங் சட்டமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை 70-லிருந்து 90 ஆக உயர்த்தப்படுகிறது; மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதி யாக, அதாவது 35இல் இருந்து 20 ஆக குறைக்கப்படுகிறது; தேர்தலுக்கு முன் வேட்பாளர்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்படும், என்பன போன்ற பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்கு போராட்டத்துக்கு வழிவகுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment