சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி


சென்னை, ஜூன் 29- மத்திய புலனாய்வுத் துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான் குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வலியுறுத் தியுள்ளார்.


இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கை:


"சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஅய் விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கி றார். காவல்துறை ஆய்வாளர் சிறீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையி னர் செய்த குற்றங்களை பாது காக்கிற வகையில் சிபிஅய் விசாரணை அமைந்துவிடக் கூடாது. ஏற்கெனவே தூத் துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத் தில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக சிபி அய் விசாரணையின் மூலம் ஒரு குற்றவாளி மீது கூட வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. மிகவும் மந்தமான முறையில் குற்றவாளிகளை பாதுகாக்கிற வகையில் சிபி அய் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்தகைய கண் துடைப்பு நாடகம் சாத்தான் குளம் படுகொலையிலும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.


எந்தக் குற்றத்தையும் செய் யாத வணிகர்களான ஜெய ராஜ், பென்னிக்ஸ் படுகொ லைக்குக் காரணமான காவல் துறை ஆய்வாளர் சிறீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் இந்திய தண்ட னைச் சட்டம் 302 பிரிவின் படி உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.


காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டவர் களிடம் எந்தவித விசாரணை யும் நடத்தாமல் சிறைக்காவ லுக்கு உத்தரவிட்ட சாத்தான் குளம் குற்றவியல் நடுவர் மற் றும் தகுதி சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் ஆகியோர் தங்களது பணியிலிருந்து கடமை தவறிய காரணத்தால் அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.


உச்ச நீதிமன்றம் சிறைக் காவல் மரணங்கள் தொடர் பாக விதித்திருக்கும் நெறி முறைகளை பின்பற்றாமல் செயல்பட்டிருக்கிற இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்தால்தான் சிபிஅய் விசாரணையில் நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.


இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment