50% வழங்காவிட்டால் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

50% வழங்காவிட்டால் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம்!

மாநிலங்களால் மத்திய அரசின் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு


சட்டப்படி  உரிய 50% இடஒதுக்கீட்டை அறவே புறக்கணிக்கும் மத்திய பிஜேபி அரசுக்குக் கண்டனம்!


திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் காணொலி கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம்


சென்னை, ஜூன் 1- மாநில அரசுகளால் மத்திய அரசின் தொகுப்புக்கு அளிக்கப் படும் மருத்துவக் கல்லூரி இடங்களுக் கான அகில இந்திய தொகுப்பில் சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்குக் கொடுக்க வேண்டிய 50 விழுக்காடு இடங்களை அறவே புறக்கணித்து வரும் மத்திய பிஜேபி ஆட்சியின் சமூக நீதிக்கு எதிரான போக்கிற்குக் கண்டனம் தெரி விக்கிறோம். இதர பிற்படுத்தப்பட்டோ ருக்குரிய 50 சதவிகித இடங்களை அளிக் காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட் டம் நடைபெறும் என்றும், அதுபோ லவே தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக் களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப் படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


தி.மு.க. சார்பில் நேற்று (31.5.2020) மாலை கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


தீர்மானம் 1


அகில இந்தியத் தொகுப்பில், இள நிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடை பிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய் திடுக!


“நீட்” தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியை எட்டாக் கனியாக் கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங் கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இள நிலை மருத்துவ படிப்பிற்கான இடங் களிலும், சமூக நீதியைத் தட்டிப் பறித்து, சமூக அநீதியை உருவாக்கிடும் விதமாக - கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத் தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத் தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக் கீட்டைச் உள்நோக்கத்துடன் மறுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனைத் துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.


பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்யமே!


மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) அனைத்து மாநிலங்களும்  முது நிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர் களுக்கு கிடைத்துள்ள இடங்கள் பூஜ்யமே. மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங் களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமு தாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப் படையில் 371 இடங்கள் அளிக்கப்பட் டுள்ளது.


நீட் தேர்வு செல்லாது


10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்க ளுக்கு 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.  “நீட் தேர்வு செல்லாது” என்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக ரத்து செய்ய வைத்த மத்திய பா.ஜ.க. அரசு, பன்னெடுங் காலத் திற்கு முன்பே, நீண்ட நெடிய போராட் டத்திற்குப் பிறகு சமூக நீதி அடிப் படையில், கிடைத்திடப் பெற்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போக வைக்கும் விதமாக, முது நிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பு களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக் கீட்டை வஞ்சிப்பதை அனைத்துக் கட்சி களின் இந்தக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.


தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது


அகில இந்திய தொகுப்பில் மருத்து வப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையினை நடத்தும் மருத்துவக் கலந்தாய் வுக்குழுவின் ‘மருத்துவ மேற்படிப்புக் கல்வி ஒழுங்குமுறை 2000’-ன்படி, ‘மருத் துவப் படிப்புக்கான இடங்களில் அந் தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் நடைமுறைப்படுத்தும் இட ஒதுக்கீடு முறையே நடைமுறைப்படுத் தப்படும் என தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது.


 “Postgraduate Medical Education Regulations, 2000”.


9 (IV): The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum-Entrance Test and candidates shall be admitted to Postgraduate Courses from the said merit lists only.


மேலும், இளநிலை மருத்துவபடிப்பிற் கான வழிமுறைகளில்;


“Regulations on Graduate medical education, 1997”


Clause 5: (5) (iii). The reservation of seats in medical colleges for respective categories shall be as per applicable laws prevailing in States/ Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum- Entrance Test and candidates shall be admitted to MBBS course from the said lists only.


உடனடியாக செயல்படுத்திட வேண்டும்


ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப் பிற்கு (ALL INDIA QUOTA) தமிழக அரசு ஒப்படைக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை, எந்தவிதக் குறைப்பாடும் இன்றி, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும். இடஒதுக்கீட்டை பொறுத்த வரை, மாநில அரசுகள் ஏற்கனவே கடை பிடித்து வரும் சதவீதப்படி, மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோலவே  பட்டியிலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட் டையும் மாநில அரசுகள் வழங்கும் விகி தசாரப்படி,  இடஒதுக்கீடு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


அதிமுக அரசின் விபரீத விளையாட்டு


“கடிதம் எழுதுகிறோம்” “கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று “நீட் தேர்வு விவகாரத்தில்” தமிழக மாணவர்களை காலை வாரியது போல் அதிமுக அரசு இதிலும் “விபரீத விளையாட்டு” நடத் தாமல் மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத் தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற் றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறது. இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சட்டப் போராட்டத்தினை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப் பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு ஏற் படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.


No comments:

Post a Comment