காணொலி மூலம் நடைபெற்ற திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

காணொலி மூலம் நடைபெற்ற திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் கலந்துரையாடல் கூட்டம்


திருவள்ளூர், ஏப்.28, திருவள்ளூர், இராணிபேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 22.4.2020அன்று மாலை ஆறுமணிக்கு காணொலி வழியாக நடைபெற்றது. கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் காணொலியில் பங்கேற்று, வணக்கத்திற்குரிய தமிழர் தலை வருக்கு அறிவாசான் தந்தைபெரியாரிடம் ஏற்பட்ட தொடர்பைப் பற்றியும், கார் பழுதானதால் லாரியில் ஏறி ஒப்புக்கொண்ட கூட்டத்திற்கு சென்று தந்தைபெரியார் பங்கேற்ற சிறப்பினையும் விளக்கி நாற்பது நிமிடம் கருத்துரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்,  மாநில அமைப் புச் செயலாளர்கள் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், தருமபுரி ஊமை.செயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் க.ஏ.மோகன வேலு, மாவட்டச் செயலாளர் கோ.கிருட்டிண மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நா.அறிவுச் செல்வம், மாவட்டத் துணைச்செயலாளர் ஸ்டாலின், திருவள்ளூர் நகர அமைப்பாளர் ரெ.யுவராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் எழில், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஏ.தமிழ்முரசு,  இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்க டேசன், மண்டல இளைஞரணி செயலாளர் இளந்திரையன், கழகப்பேச்சாளர் பெரப் பேரி சங்கர், ஆசிரியர்கள் சிவசோதி, இரா வணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வெ.பெரியார் செல்வம், செயலாளர் லோ.மணியம்மை, லோ.அறிவரசி, பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் லோ.அறிவுமணி, மகளி ரணி பொறுப்பாளர்கள் செல்விலோகநாதன், பிரேமாசங்கர், சுசீலாவெங்கடேசன் ஆகி யோர் இந்நிகழ்வில் பங்கேற்று கலந் துறவாடினர். மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.


No comments:

Post a Comment