மத்தியப் பிரதேசம் - ராகுல் நடைப் பயணத்தில் மோடி ஆதரவு முழக்கமும் - ராகுல் காந்தி எதிர்கொண்ட விதமும் வியக்கத்தக்கது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

மத்தியப் பிரதேசம் - ராகுல் நடைப் பயணத்தில் மோடி ஆதரவு முழக்கமும் - ராகுல் காந்தி எதிர்கொண்ட விதமும் வியக்கத்தக்கது

போபால்,மார்ச் 6- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது பயணம் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரத்தை அடைந்தபோது, அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என முழக்கம் எழுப்பினர். இதைப் பார்த்ததும் ராகுல் காந்தி தனது பயண வாகனத்தை அவர்கள் அருகில் நிறுத்தினார்.

இதையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ராகுல் காந்தி, அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களின் அருகில் சென்றார். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் ‘ஜெய் சிறீ ராம்’ என முழக்கம் எழுப்பினர். அங்கிருந்த பா.ஜ.க. தொண்டர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ராகுல் காந்தி மீண்டும் தனது வாகனத்தில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது வாகனத்தில் இருந்தவாறு பா.ஜ.க. தொண்டர் களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுப்பது போல் சைகை காட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. நிர்வாகி முகேஷ் துபே, “நாங்கள் மோடி, ஜெய் சிறீ ராம் என முழக்கங்களை எழுப்பியபோது ராகுல் காந்தி தனது வாகனத்தில் இருந்து இறங்கி எங்களை நோக்கி வந்தார். அவரிடம் நாங்கள் அவரை வரவேற்பதாக கூறினோம். தொடர்ந்து அவருக்கு சில உருளைக்கிழங்குகளையும் வழங்கினோம்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment