தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரம்

புதுடில்லி, மார்ச் 18- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவ ரங்களை தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி, திரிண மூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ரூ.656.5 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறை கடந்த 2017ஆ-ம் ஆண்டு பட் ஜெட்டில் அறிவிக்கப் பட்டு, 2018 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப் பிலான தேர்தல் பத்திரங் களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) வெளியிட்டது.

இந்த பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர் கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன் கொடையாக வழங்கினர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட் டன. இதையடுத்து, இத் திட்டத்தை தலைமை நீதிபதி சந்திரசூட் தலை மையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15ஆ-ம் தேதி ரத்து செய்தது.
இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப் பிக்குமாறு ஸ்டேட் வங் கிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர் தல் ஆணையத்திடம் எஸ்பிஅய் கடந்த 12-ஆம் தேதி சமர்ப்பித்தது. தேர் தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரங்களை கடந்த 14ஆ-ம் தேதி வெளியிட் டது.
அதில், நன்கொடை வழங்கிய நிறுவனங்கள், தனிநபர்களின் பெயரு டன் ஒரு பட்டியல், கட்சி கள் பெற்ற நன்கொடை விவரத்துடன் ஒரு பட்டி யல் என 2 பட்டியல்கள் இடம்பெற்றன.

எந்த நிறுவனம், யாருக்கு எவ்வளவு நன் கொடை வழங்கியது என்ற விவரம் குறிப்பிடப் படவில்லை.
இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங் களை எஸ்பிஅய் முழுமை யாக வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஅய் மார்ச் 18ஆ-ம் தேதி (இன்று) விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
இதற்கிடையே, சில கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங் களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
இவற்றையும் இணை யதளத்தில் வெளியிட் டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஊடக பிரிவு இணை இயக்குநர் அனுஜ் சந்தக் நேற்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2019 ஏப் ரலுக்கு பிந்தைய தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் ஆணை யம், 2019 ஏப்ரலுக்கு முந்தையவிவரங்களை நேற்று வெளியிட்டுள் ளது.
அல் கட்சிகள் வழங்கிய புள்ளி விவரங் களும் இடம் பெற்றுள் ளன. அதன் விவரம்:
புதிய புள்ளி விவரங்க ளின்படி தேர்தல் பத்தி ரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி நன் கொடையாக பெற்றுள் ளது.
பாஜகவுக்கு அடுத்து திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற் றுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442.8 கோடி, தெலுங்கு தேசம் ரூ.181.35 கோடி பெற் றுள்ளன.

திமுக, அதிமுக
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு ரூ.656.5 கோடி கிடைத்துள்ளது. இதில் ரூ.509 கோடியை லாட்டரி அதிபர் சான் டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறு வனம் வழங்கியுள்ளது.
திமுகவின் ஒட்டு மொத்த தேர்தல் பத்திர நிதியில் மார்ட்டினின் நன்கொடை மட்டுமே 83 சதவீதம் ஆகும்.
திமுக உட்பட பல் வேறு அரசியல் கட்சிக ளுக்கு மார்ட்டின்ரூ.1,368 கோடியை தேர்தல் பத்தி ரங்கள் மூலம் நன் கொடையாக வழங்கியுள் ளார்.
இதில் 37 சதவீதம் திமுகவுக்கு கிடைத்துள் ளது. அதிமுகவை பொருத் தவரை, லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் லிமிடெட் ரூ.1 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி, கோபால் நிவாசன் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.6.05 கோடியை நன் கொடையாக பெற் றுள்ளது.
பிஜு ஜனதா தளத் துக்கு ரூ.944.5 கோடி, பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.1,322 கோடி, சமாஜ்வாதிக்கு ரூ.14.05 கோடி, அகாலி தளத்துக்கு ரூ.7.26 கோடி, அதிமுகவுக்கு ரூ.6.05 கோடி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கிடைத் துள்ளது.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ரூ.56 கோடி, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ரூ.89.75 கோடி கிடைத் துள்ளது.

No comments:

Post a Comment