அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

featured image

ஆண்டிப்பட்டி, மார்ச் 17- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் ஆண்டிப்பட்டியில் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள் விழா! கழகக் கொடியேற்று விழா 10.3.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டக் கழக துணைத் தலைவர் ம.செந்தில்வேல் வரவேற்புரை யாற்றினார்.

ஆலங்குளம் பெரியார் பெருந் தொண்டர்கள் ஞானராஜ், பெரியார் குமார், சக்திவேல், சுரண்டை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கழக இலட்சியக் கொடியினை கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத் துரை எழுச்சி முழக்கத்தோடு ஏற்றி வைத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு. இரா.குணசேகரன் தொடக்க வுரையாற்றினார். கழகப் பேச் சாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார். இறுதியில் மாவட்டச் செயலாளர் கோ.முருகன் நன்றிகூறினார். நிகழ்ச்சி யில் மேட்டூர் செல்வமணி கழகத் தில் இணைந்தார்.

திருநெல்வேலி

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது .
‘பெரியார் பெருந்தொண்டர்’ காப்பாளர் இரா.காசி தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்தார். மாவட்ட செயலாளர் இரா.வேல்முருகன் அன்னை மணியம்மையாரின் தொண்டினை விளக்கி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் தோழர் கள் தச்சை பகுதி கழகத் தலைவர் கருணாநிதி, தச்சை பகுதிகழகச் செயலாளர் மாரி கணேஷ், நகர செயலாளர் மகேஷ் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநகரத் தலைவர் முரசொலி முருகன், பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் ஜார்ஜ், ‘பெரியார் பிஞ்சு’ சிறீநாத், திராவிடர் கழக நகர தலைவர் வெயிலு முத்து, சந்திப்பு நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

No comments:

Post a Comment