பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை

featured image

குமரி, மார்ச் 8- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப் புணர்வு பரப்புரை செண்பகராமன் புதூரில் எம்.இ.டி. கல்வியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர், பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது.

கல்லூரி செயல் அதிகாரி கோ.மகா தேவன் தலைமை தாங்கினார். பகுத் தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு வரவேற்புரையாற்றினார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம்; துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரை யாற்றினர். சிறீலதா (கல்லூரி முதல்வர்) இணைப்புரையாற்றினார். தமிழ் பேராசிரியை பெனில் போட்டியினை ஒருங்கிணைத்தார். 100க்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட் டன.

No comments:

Post a Comment