சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.அய். மூலம் பயணச் சீட்டு வசதி அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.அய். மூலம் பயணச் சீட்டு வசதி அறிமுகம்

சென்னை,மார்ச்.1 – சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய (பிஎஸ்-க்ஷிமி) பேருந்து சேவையை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தனர்.
மேலும் டெபிட் கார்டு, யு.பி.அய். மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக மின் னணு பயணச் சீட்டு இயந்திரத்தையும் நடத் துநர்களுக்கு வழங்கினர். யு.பி.அய். முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடை முறைக்கு கொண்டு வரப்பட் டுள்ளன.

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யு.பி.அய். சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந் துகளில் கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், பேருந்துகளில் நடத்து நர்கள் யு.பி.அய். மற்றும் கார்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர். தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற் றும் சேருமிடத்தை தேர்வு செய்து அதற் கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங் கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யு.பி.அய்., க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்ட மும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment