‘இந்தியா' கூட்டணியை ஆதரித்து பெரம்பூர்-மங்களபுரத்தில் கழகப் பிரச்சாரக் கூட்டம் - அதிரடி அன்பழகன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

‘இந்தியா' கூட்டணியை ஆதரித்து பெரம்பூர்-மங்களபுரத்தில் கழகப் பிரச்சாரக் கூட்டம் - அதிரடி அன்பழகன் சிறப்புரை

featured image

மங்களபுரம், மார்ச் 20- வட சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண் டும் – ஏன்? என கழக பிரச் சாரக் கூட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2024 அன்று மாலை 6.30 மணிக்கு பெரம்பூர்-மங்களபுரம் அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு நினைவுப் பூங்கா அருகில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் தலைமை வகித்தார். இளைஞரணித் தோழர் வழக்குரைஞர் ஆகாஷ் ஜொகனாஸ் அனைவரை யும் வரவேற்றுப் பேசினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாவட்ட ப.க. தலைவர் சண்முக நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் இந் திய மக்கள் அடைந்த இன்னல்களை விளக்கி உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

படத்திறப்பு

மேடையில் அமைக் கப்பட்டிருந்த அன்னை மணியம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்து கழக துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி உரையாற்றி னார். தந்தை பெரியா ரைப் பாதுகாத்து, இயக்க வளர்ச்சிக்கு அன்னை மணியம்மையார் அவர் கள் ஆற்றிய அயராத தொண்டறப் பணிகளை விளக்கிப் பேசினார்.
74ஆவது வட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சித் தோழர் சுப்பிரமணி, வட்ட தி.மு.க. அவைத் தலைவர் வெங்கடேசன், அயன்புரம் தலைவர் சு. துரைராசு, மாநில இளை ஞரணி துணைச் செயலா ளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ் ஆகியோர் உரை யாற்றினர். நிறைவாக கிரா மப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் அதிரடி அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
கடவுள் மறுப்பு நாத் திக இயக்கத்தை சிறப்பாக வழி நடத்திய அன்னை மணியம்மையாரின் சமுதாயப் பணிகளைக் குறித்தும், பா.ஜ.க. ஆட் சியை ஒழித்திட இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வது தமிழ்நாட்டு மக்களின் தலையாய கடமை எனவும் விளக் கமாகப் பேசினார்.

சிறப்புச் செய்தல்

நிகழ்சிக்கு வருகை தந்த ‘இந்தியா’ கூட்ட ணிக் கட்சிகளைச் சேர்ந் தவர்களுக்கும், பெரம்பூர் — மங்களபுரம் கழகப் பொறுப் பாளர்களுக்கும், இளைஞரணித் தோழர் களுக்கும் அதிரடி அன் பழகன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகி யோர் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தனர்.
ஓட்டேரி மற்றும் மங் களபுரம் ஆகிய இடங்க ளில் நடைபெற்ற கழகப் பிரச்சாரக் கூட்டங்களை சிறப்பான வகையில் ஒருங்கிணைத்த வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியனைப் பாராட்டி மாவட்ட இளை ஞரணி சார்பில் முனை வர் அதிரடி அன்பழகன் பயனாடை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் 74ஆவது வட்ட திமுக செயலாளர் ஜி.கிருஷ்ணகுமார், அம் பேத்கர் முன்னணி கழக நிறுவனர் திண்டிவனம் சிறீராமுலு, பொதுச் செயலாளர் ஜி.பிரபாக ரன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சி.பாசுகர், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், கோ.தங் கமணி, 74ஆவது வட்ட தி.மு.க. மூத்த நிர்வாகி பன்னீர்செல்வம், அரும் பாக்கம் சா.தாமோதரன், ப.கோ பாலகிருட்டிணன், ச.இராசேந்திரன், சு.அர விந்த்குமார், மங்களபுரம் பாஸ்கர், ஊடகவியலா ளர் ஜோதி ராமலிங்கம், க.கலைமணி, வழக்குரை ஞர் இராமச்சந்திரன், கண் மணி துரை, வழக்குரைஞர் மு.வேலவன், த.மரகதமணி தங்க.தனலட்சுமி, மு.பவானி, பா.ரமணி, பா.நதியா, கவிதா ஜோதி, கொடுங் கையூர் இரவிக்குமார், சூளை வெங்கடேசன், மு.டில்லிபாபு, மென் பொறியாளர் அருள், யுகேஷ் மற்றும் தோழர் கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிறை வாக மாவட்ட இளைஞ ரணி செயலாளர் பா.பார்த் திபன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment