அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு

featured image

அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு ‘வடமேற்குடியான்’ என்பவர் 1974இல் ‘உண்மை’ ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன.

“சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்றுக் கோளாறு. இதையறியாத நண்பர்கள் உப்புமா தருகிறார்கள். பெரியாரும் வேண்டாமெனச் சொல்ல மனமின்றி அள்ளி வாயில் போடுகிறார். அதைப் பார்த்துவிட்டு மணியம்மையார் ஓடிவந்து வாயில் போட்டதைத் துப்பும்படி கெஞ்சுகிறார். அய்யா குழந்தையைப் போல் அடம் பிடிக்கிறார். அம்மா தாய் போல் கடிந்து கொள்கிறார். அவர் துப்பும் வரை விடவில்லை. பிறகு மருத்துவர் சொன்னபடி சூடான பானம் கொண்டு வந்து கொடுக்கிறார்.”

இது போலப் பெரியாரைக் கண்காணித்து வந்த அன்னையார் கழகத் தொண்டர்கள், அய்யாவை எவ்வாறு ‘அய்யா’ என்றோ ‘தந்தை பெரியார்’ என்றோ குறிப்பிடுகிறார்களோ அதுபோலவே அம்மாவும் அய்யா அவர்கள், பெரியார் அவர்கள் என்றே குறிப்பிட்டார். என் கணவர் என்று எப்போதாயினும் தவிர்க்கவியலாத சூழ்நிலையில் தான் குறிப்பிட்டிருப்பார்.

No comments:

Post a Comment