பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட நாகை மாவட்ட திராவிடர் கழகம் கொட்டாரக்குடியில் நடத்திய தெருமுழக்கம் என்னும் பெருமுழக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட நாகை மாவட்ட திராவிடர் கழகம் கொட்டாரக்குடியில் நடத்திய தெருமுழக்கம் என்னும் பெருமுழக்க பொதுக்கூட்டம்

featured image

கொட்டாரக்குடி, மார்ச் 11- பாசிச பாஜக ஆட்சியை வீழ்த் திட நாகை மாவட்ட திராவிடர் கழகம் நடத் திய தெருமுழக்கம் என் னும் பெருமுழக்கப் பொதுக் கூட்டம் திருமருகல் ஒன் றியம் கொட்டாரக்குடி யில் 09.03.2024, சனிக் கிழமை மாலை 6.30 மணி யளவில் தொடங்கி எழுச் சியோடு நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருமரு கல் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் நாக.இரவிச்சந்திரன் தலைமை ஏற்றார். கூட்டத்தில் திராவிடர் கழகத் திரு மருகல் ஒன்றிய துணைச் செயலாளர் இரா.ரமேஷ் அனைவரையும் வர வேற்று தொடக்கத்தில் உரையாற்றினார்.

திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலா ளர் ஆர்.டி.எஸ் சரவ ணன், மாவட்ட திராவி டர் கழகத் துணைத் தலை வர் பொன்.செல்வராசு, கழக திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் இராஜீவ்காந்தி, மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் சு. ராமரா ஜன், கழக ஒன்றிய துணைத் தலைவர் பா.காமராஜ், கழக நாகை நகர தலைவர் தெ.செந் தில்குமார் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

கூட்டத்தில் தி.மு.க தலைமைக் கழக பேச்சா ளர், மாவட்ட துணை செயலாளர் ஆரூர்.மணி வண்ணன் தொடக்க உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன் முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இள மாறன் ஆகியோர் அறி முக உரையாற்றி சிறப்பித் தனர்.
கூட்டத்தில் நாகை கழக மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. நெப்போலி யன், மாவட்ட செயலா ளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இல.மேகநாதன் ஆகி யோர் கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி உரையாற்றினர்.

பாசிச பாஜக ஆட் சியை வீழ்த்த வேண்டும் என்ற பெரு முழக்கத்தை முன்வைத்து திராவிடர் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், திரா விடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட திமுக செயலா ளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரை யாற்றினர்.
கூட்டத்தில் திரா விடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த தோழர்களும் மற்றும் ஏராளமான பொது மக்க ளும் பங்கேற்று சிறப்பித் தனர்.
திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் கார்த்தி கூட்டத்தில் இறுதியாக நன்றியுரை கூறினார்.
எழுச்சியோடு நடை பெற்ற கூட்டம் இரவு 9.30 மணியளவில் நிறை வடைந்தது.

No comments:

Post a Comment