'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை

featured image

டாடா மோட்டார்ஸ் ரூபாய் 9000 கோடி முதலீடு
முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, மார்ச் 14 சென்னையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ் நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த் தகத் துறை செயலாளர் அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந் தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும், வாகன உற்பத்தித் திட்டத் தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத் தில் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்ட மிட்டுள்ளது. அந்தவகையில், தமிழ் நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரி டையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது: தமிழ்நாடு இந்தி யாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நல்லாட்சியே காரணம். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட் டாளர்கள் முதலில் முதலமைச்சரின் கதவைத் தான் தட்டுகின்றனர். அதே போல், தமிழ்நாட்டில் இருக்கும் சூழல், கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலை அமைக்க ஏதுவான இடங்கள், மகளிருக் கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தான் பல புதிய தொழில்துறை நிறுவனங்கள் தொழிற் சாலைகளை தொடங்குகின்றனர். அதன் தொடர்ச்சியாக டாடா நிறுவ னம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் முதலீடு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment