மக்களவைத் தேர்தல்: சி.பி.அய்.க்கு திருப்பூர், நாகை சி.பி.எம்.க்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

மக்களவைத் தேர்தல்: சி.பி.அய்.க்கு திருப்பூர், நாகை சி.பி.எம்.க்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 13- மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதற் கான ஒப்பந்தம் கையெ ழுத்தானது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப் பூர் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக் கையில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்த லில், திராவிட முன்னேற் றக் கழகமும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட் சிகளும் இணைந்து போட் டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப் பந்தத்தின் தொடர்ச்சி யாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப் பட்டது.
தொகுதிகளின் விவரம்: 1.மதுரை 2. திண் டுக்கல்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் – சி.பி.அய். மாநிலச் செய லாளார் இரா.முத்தரசன் இது குறித்து செய்தியா ளர்கள் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.

கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம், திமுகவினர் திண்டுக் கல்லை விட்டுக் கொடுத் துள்ளனர்.

தேர்தலுக்கு முன் னால் சிஏஏவை அமல் படுத்தி ஒன்றிய பா.ஜ.க. மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது” என்றார்.

No comments:

Post a Comment