செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 2, 2024

செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா தொடக்கம்

featured image

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செய்யாறு, மார்ச் 2- செய்யாறு முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளை (1.3.2024) முன்னிட்டு அவ ரது மகன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேல். சோ.நெடுமாறன் தலைமையில் செய்யாறு தந்தை பெரியாரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வேல் சோமசுந்தரம் அவர்களின் நூற் றாண்டு விழா தொடக்க நாள் நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்விலே செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், பொதுக்குழு உறுப்பினர் தி.காமராஜ், எம்.வி. கோவிந்தன், வி.வெங்கட்ராமன், தங்கம், பெரு மாள், கஜபதி, அரவிந்து மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த சிவக்குமார், சவுந்தர்ராஜன் மற்றும் சவுந்தரபாண்டியன், மனோஜ்குமார், ஜாபர் அலி உள்ளிட்ட தோழர்களும் விழா விலே கலந்து கொண்டனர்.
படிகலிங்கம் நிறுவனங்களின் தலைவர் மறைந்த டி.பி.திருச்சிற்றம் பலம் அவர்களின் மூத்த மகன் மணி மற்றும் பல் மருத்துவர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப் பித்தார்கள்.

No comments:

Post a Comment