திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டி

featured image

சென்னை,மார்ச் 19 – நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார் பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் பம்பரம் சின்னம் தங்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ 18.3.2024 அன்று செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவர் கூறியது:
“மதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன ராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர், பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான “இண்டியா” கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தேர் தலில் மதிமுக சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர் தேர்வு குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை வேட் பாளராக போட்டியிடச் செய்வதென்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் தவறான கணக்கீட்டால், மதிமுக பம்பரம் சின் னத்தை இழந்துள்ளது. எங்களது வாக்கு சதவீதமான 5.99 என்பதை 6 சதவீதமாக அவர்கள் கணக்கிட்டிருக்க வேண்டும். எனவே, தவறான கணக்கீட்டால், அங் கீகாரத்தையும், சின்னத்தையும் இழந் தோம். எனவே, டில்லி சென்று தேர்தல் ஆணையத்திடம், ஆதாரங்களுடன் தேர் தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். வரவு செலவுக் கணக்கும், வருமான வரிக் கணக்கு என அனைத்தையும் நூறு சத வீதம் சரியாக வைத்திருக்கிறோம்.
பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. அப்படி கிடைக்காதபட்சத்தில், பொதுச் சின்னங்கள் என்று தேர்தல் ஆணையத் தால், வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல் களில் இருந்து வேட்பு மனுவில் குறித்து கொடுக்க வேண்டும். ஒரு புதிய சின்னத்தை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க முடியும். உதயசூரியன் எல்லாம் பழக்கமான சின்னம். எனவே, அதில் போட்டியிட வேண்டும் என்று கூறியதால் தான், உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டோம்.

ஆனால், இப்படி போட்டியிடுவது சட்ட ரீதியாக தவறாக வந்துவிடும். யாராவது இது தவறான வெற்றி எனக்கூறி வழக்குத் தொடர்ந்தால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். எனவே, கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், அதற் கேற்ற வகையில் ஒரு சின்னத்தை தேர்ந் தெடுத்து அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்” என்று வைகோ கூறினார்.

No comments:

Post a Comment