மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ தி.மு.க. பணம் வசூலிக்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ தி.மு.க. பணம் வசூலிக்கவில்லை

featured image

எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில்

சென்னை, மார்ச் 18- நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்க வில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கருத்துக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பொதுப்பணித்துறையின் ஒப் பந்தங்களை மொத்தமாக தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர் களுக்கும் கொடுத்து சிக்கிக் கொண்டவர் பழனிசாமி.
குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தார். சிபிஅய் நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக் கிறது. காவல்துறை தலைமை இயக் குநரே விசாரணையில் சிக்கினார்.
தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், `முதல மைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்’ என்று குற்றம் சாட்டப் பட்டவர் பழனிசாமி.
பொள்ளாச்சி பாலியல் வழக் கில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய வர் பழனிசாமி. கோடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள்.
இப்படிப்பட்ட நீண்டதொரு `குற்றப்பட்டியல்’ கொண்டவர் பழனிசாமி.

திமுக சார்பில் யாரிடம் நன் கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.
இதில் மறைப்பதற்கு ஏது மில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட் டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலு கையும் திமுக ஆட்சியில் தரப்பட வில்லை. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது திமுக அரசுதான்.
இப்போது தனது எஜமா னர்களான பாஜகவை காப்பாற் றுவதற்காக அறிக்கை விடுகிறார். அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர் தல் பத்திரங்கள் மூலமாக பணத் தைப் பறித்துள்ளது பாஜக.
பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளன. இதன் மூல மாக, மிரட்டிப் பணம் பறிப்பது தேசிய அளவில் அம்பலமாகி யுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடிய வில்லை. பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

`பாஜகவுடன் கூட்டணியே கிடையாது’ என்று சொல்லும் பழ னிசாமி, பாஜகவின் மோசடித் தனத்தைக் கண்டித்து அறிக்கை விடுவாரா?
நாங்கள் யாரையும் மிரட் டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் பழனிசாமி. அவர் கைக்குஅதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய் கொண்டுஇருக்கிறது.
அ.தி.மு.க. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியடைந் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment