உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்

featured image

சென்னை, மார்ச். 1- சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ஆம் தேதி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயர் நீதி மன்றத்தில் அவர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் நேற்று (29.2.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.முனியப்ப ராஜ்: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர் பாராதவிதமாக உயிரிழந்தார்.

நீதிபதிகள்: சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஒன்றிய அரசின் அனுமதி எப்போது கிடைத்தது?
ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: அவரை இலங்கைக்கு அனுப்ப ஒன்றிய அரசு சார்பில் பிப். 22ஆ-ம் தேதியே அனுமதி வழங்கப் பட்டு விட்டது.

நீதிபதிகள்: ஒன்றிய அரசு முன்கூட்டியே அனுமதி அளித் தும், சாந்தனை இலங்கைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பாதது ஏன்?
மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா: சாந்தனின் உடல்நிலை பாதிக் கப்பட்டதால் கடந்த ஜனவரி 24ஆ-ம் தேதி திருச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அவரால் நகரக்கூட முடி யாத சூழலில் மேல் சிகிச்சைக் காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக் கைகள் எடுத்து வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துவிட் டார்.
சாந்தனின் உடலை இலங் கைக்கு கொண்டு செல்ல தேவை யான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வரு கிறது.
ஒன்றிய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தூதரக அனுமதி உள் ளிட்ட அனைத்து ஆவணங் களும் உடனடியாக வழங்கப் படும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: உயிரிழந்த சாந்தன் தொடர்பான ஆவணங்களை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக தூதரக அளவிலான சான்றிதழ்களை வழங்க ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான பொறுப்பு (‘நோடல்’) அதிகாரிகளாக மூத்த அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரி களை நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மார்ச் 4ஆ-ம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment