ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல்:
தமிழ்நாடு-புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 17 நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்கள வைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு, புதுச் சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் டில்லியில் நேற்று (16-3-2024) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின்

ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங் களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினம் தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டதேர்தலில் 89 தொகுதிகள், மே 7 ஆம் தேதி 3 ஆம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகள், மே 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட தேர்தலில் 96 தொகுதிகள், மே 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட தேர்தலில் 49 தொகுதிகள், மே 25 ஆம் தேதி 6 ஆம் கட்ட தேர்தலில் 57தொகுதிகள், ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படும்.

கருநாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதி களுக்கும், மே 7 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கேரளாவின் 20 மக்களவைத் தொகுதி களுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங் கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உ.பி., மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19 ஆம் தேதி 8 தொகுதிகள், 26 ஆம் தேதி 8 தொகுதிகள், மே 7 ஆம் தேதி 10 தொகுதிகள், மே 13 ஆம் தேதி 13 தொகுதிகள், மே 20 ஆம் தேதி 14 தொகுதிகள், மே 25 ஆம் தேதி 14 தொகுதிகள், ஜூன் ஒன்றாம் தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதேபோல் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19 ஆம் தேதி 3 தொகுதிகள், ஏப்ரல் 26 ஆம் தேதி 3 தொகுதிகள், மே 7 ஆம் தேதி 4 தொகுதிகள், மே 13 ஆம் தேதி 8 தொகுதிகள், மே 20 ஆம் தேதி 7 தொகுதிகள், மே 25 ஆம் தேதி 8 தொகுதிகள், ஜூன் ஒன்றாம் தேதி 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

பிகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்திலும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19 ஆம்தேதி 4 தொகுதிகள், ஏப்ரல் 26 ஆம் தேதி 5 தொகுதிகள், மே 7 ஆம் தேதி 5 தொகுதிகள், மே13 ஆம் தேதி 5 தொகுதிகள், மே 20 ஆம் தேதி 5 தொகுதிகள், மே 25 ஆம் தேதி 8 தொகுதிகள், ஜூன் ஒன்றாம் தேதி 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராட்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடத் தப்படுகிறது.
இதன்படி ஏப்ரல் 19 ஆம் தேதி 5 தொகுதிகள், ஏப்ரல் 26 ஆம் தேதி 8 தொகுதிகள், மே 7 ஆம் தேதி 11 தொகுதிகள், மே 13 ஆம் தேதி 11 தொகுதிகள், மே 20 ஆம் தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதன்படி ஆந்திராவில் 175பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13 ஆம் தேதியும், ஒடிசாவின் 147 தொகுதி களுக்கு மே 13, 20, 25 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதிகளிலும், அருணாச்சல பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் ஏப். 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். விளவங்கோடு இடைத்தேர்தல்: மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு, கருநாடகா, பிகார், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், மகாராட்டிரா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத் தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் விளவங்கோடு சட்டப் பேர வைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக் கிறது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறி விக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் நேற்று (16-3-2024) முதல் தேர்தல் நடத்தைவிதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment