சென்னை மாவட்டத்தில் 162 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

சென்னை மாவட்டத்தில் 162 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

featured image

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை,மார்ச் 12– தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10.3.2024 அன்று சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக் கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சென்னை மாவட்டத்திற் குட்பட்ட 162 மாற்றுத்திறனாளி பய னாளிகளுக்கு ரூ.1,48,19,540 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்கள் பாதிக்கப்பட்ட 140 பயனாளி களுக்கு ரூ.1,34,41,540 மதிப்பில் (ஒன்றின் விலை ரூ.96,011 ) இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாக னங்கள், முதுகுத்தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.13,78,000 (ஒன் றின் விலை ரூ.1,06,000 ) மதிப்பில் பேட் டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிக ளுக்கான 4 வகை திருமண நிதி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.1,48,19,540 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அனுசயா தேவி, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் சீ.குமார், கதிர்வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment