பா.ஜ.க.வினர் அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர் சித்தராமையா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

பா.ஜ.க.வினர் அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர் சித்தராமையா குற்றச்சாட்டு

featured image

பெங்களூரு, பிப்.27 பாபாசாகேப் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், பாஜகவினர் அதனை மாற்றத் துடிக் கின்றனர் என கருநாடக முதல மைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

கருநாடக அரசின் சார்பில் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் ‘அரசமைப்பு சட்ட மும் தேசிய ஒருமைப்பாடும்’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடை பெறுகிறது. கருநாடக முதலமைச்சர் சித்தராமையா 25.2.2024 அன்று அந்த மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றியதாவது: பாபாசாகேப் அம்பேத்கர் கடுமையாக உழைத்து இந்த உன்னதமான அரசமைப்புச் சட்டத்தை எழுதினார். இதனை அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக மட்டும் எழுதவில்லை. ஆனால் பாஜகவினர் இந்த அரச மைப்பு சட்டம் சமூக மக்களுக்கு மட்டுமே உரியது என பொய் பிரச் சாரம் செய்துவருகிறனர். இந்த அரசமைப்பு சட்டம் அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை நிலைநாட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

அரசமைப்பு சட்டம் வலியு றுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோ தரத்துவம் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு கருநாடக அரசு செயல்படுகிறது. இந்த தத்து வத்துக்கு எதிரானவர்கள் அதனை அழிக்க வேண்டும் என நினைக் கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டம் சமத்துவத்தை பேசுகிறது. சமூக, பொருளாதார, அரசியல் அதிகார ஏற்றதாழ்வுகளை ஒழிக்க முயல் கிறது. பாபாசாகேப் அம்பேத்கர் பல்வேறு தரப்பினருடன் போராடி ச‌மத்துவத்தை வலியுறுத்தும் இந்த அரசமைப்பு சட்டத்தை இயற்றி னார்.
ஆனால் பாஜகவினர் அதனை மாற்ற வேண்டும் என பாஜகவினர் துடிக்கிறார்கள்.

சமத்துவமின்மையை விரும்புவர் களால் நாட்டுக்கே ஆபத்து நேரிடும். அவர்களை அதிகாரத்தில் அகற்ற வேண்டும். அரசமைப்பு சட்டத் துக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட் டால், இந்த நாட்டின் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். அதனை மாற்ற துடிப்போரை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய் யாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் வாழ முடியாது. ஜனநாயகமும், சமத்துவமும் இந்தியாவில் நிலைத் திருக்க வேண்டுமானால் அம்பேத் கரின் அரசமைப்பு சட்டமே தேவை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
இந்த அரசமைப்புச் சட்ட மாநாட்டில் சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர், பெஜவாடா வில்சன், பேராசிரியர்கள் சுக்தேவ் தோரட், அசுதோஷ் ரஷ்னி, ஜெயந்தி கோஷ் உள்ளிட்டோர் கருத்துரையாளர் களாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment