புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை, பிப். 7- புதுக்கோட்டை நகர் மன்றத்தில் வரும் 9.2.2024 மாலை 5மணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் திருநாள் விழா என முப்பெரும் விழாவாக கலைஞர் தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்நிகழ்விற்கு வருகை தரும்போது புதுக் கோட்டை திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமையில், அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் க.முத்து, காப்பாளர்கள் அறந் தாங்கி பெ.இராவணன், புதுக்கோட்டை ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலையில் கழகத் தோழர்கள் வரவேற்க உள்ளார்கள்.
எனவே கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரவேற்புக்கான ஏற்பாடு களை புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment