சென்னை கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

சென்னை கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

featured image

சென்னை,பிப்.6- கிளாம்பாக் கம் பேருந்து நிலையத்தில் விரை வில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைக்கப் படும் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தி யாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான “கலை ஞர் நூற்றாண்டு பேருந்து முனை யத்தை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் கள்.
அதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தில் ரூ.14.30 கோடி மதிப் பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிக ளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பர சன் மற்றும் அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத் தார்கள்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் ”மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தினம் தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக் கின்றார்கள்.
இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சி யோடு பயன்படுத்துகின்ற அள விற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வரு கிறது.
முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்” ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு இன்று (5.2.2024) அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இம்முனையத்தில் வெளியூர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் பேருந்துகள் (விஜிசி) நிற்கும் இடத்திற்கும் இடையில் பயணிகள் சுலபமாக செல்வ தற்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம் பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப் பட்டு, 6 மாதங்களில் இரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது.
மேலும், இம்முனையத்தின் எதிர்புறம் உள்ள ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கிளாம்பாக் கம் ரயில் நிலையத்தை இணைக் கும் நடை மேம்பாலம் 31.01.2024 அன்று டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள் ளன.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத் தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத் தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது.
மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் முகப்பு வளைவு அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

இம்மாத இறுதிக்குள் பணி கள் முடிவடைந்து விடும். இப் பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச் சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டு மான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இவ்விடத்தில் 300 பணியாளர் களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற் றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரு கிறது.
இப்பணி மார்ச் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தை மக் கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வரு கிறது.
மேலும் பயணிகளின் தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் இப்பேருந்து முனையத்தில் தர மான மற்றும் சுகாதாரமான முறையில் மலிவு விலை உண வகங்கள் வெகு விரைவில் திறக் கப்படும்.
குறிப்பாக, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பே ருந்து முனையம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது. -இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment